வீட்டுக் குறிப்புகள் - 39 - சசிரேகா
எரிந்த கொசுவர்த்தி சுருள்களை பாத்ரூமில் வைத்தால் கரப்பான் பூச்சிகள் பல்லி ஆகியவை வராது
நான்ஸ்டிக் தோசைக் கல்லை உபயோகித்த உடன் சூடாக இருக்கும் போதே அதை ஒரு துணியால் துடைக்க வேண்டும் ஆறிய பின் சோப் போட்டு கழுவிவிட்டால் அந்த கல்லின் ஓரம் தடிமனாகாது.
குத்துவிளக்கு ஏற்றினால் தீபம் நின்று எரியவும் விளக்கின் பாதத்தில் எண்ணெய் சொட்டாமல் இருக்கவும் ஒரு வழி உள்ளது. ஹார்டுவேர் கடைகளில் விற்கும் உலோக வாஷர்களை விளக்கின் முகப்பில் வைத்து அவற்றுக்குள் திரியை நுழைத்து ஏற்றிப்பாருங்கள். தீபம் ஆடாமல் நெடுநேரம் நின்று எரியும் எண்ணெயும் கீழ்நோக்கி கசியாது.
வீட்டில் ஸ்பேனர் போன்றவை வைத்திருக்கும் டூல்ஸ் பாக்சில் ஒரு 2 சாக்பீஸ் கட்டி அல்லது கரித்துண்டை போட்டு வையுங்கள் அது உள்ளே இருக்கும் ஈரப்பசையை உறிஞ்சிவிடும் அதனால் ஸ்பேனர் போன்ற பொருட்கள் துருப்பிடிக்காது
பாத்ரூம் பாசி படிந்தால் பாத்திரம் துலக்கும் பவுடரை பரவலாக தூவிவிட்டு பின் நன்றாக தேய்த்து கழுவி விட பிசுக்கு நீங்கும் வாரம் ஒரு முறை செய்யலாம்