வீட்டுக் குறிப்புகள் - 38 - சசிரேகா
ஈக்கள் – வேப்பிலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை தெளித்தால் ஈக்கள் வராது.
கரப்பான் பூச்சி –
அ) சிவப்பு பல்ப் எரிய விடலாம் அந்த சிவப்பு நிறம் கரப்பானுக்கு அலர்ஜியாகும்
ஆ) சுவற்றின் மூலையில் மஞ்சள் பொடியை தூவினால் வராது
இ) இரவில் பாத்ரூம் சாக்கடைகளில் சிறிது கெரோசினை ஊற்றினால் அந்த வாடைக்கு எலிகள் கரப்பான்கள் வராது
அரை கப் கெரோசினில் 3 கற்பூர வில்லைகளை கலந்து அரை பக்கெட் தண்ணீரில் ஊற்றவும் இந்த தண்ணீரில் வீட்டின் தரையை துடைத்தால் எந்த பூச்சிகளும் அண்டாது.
காகிதத்தை அரிக்கும் அந்துப்பூச்சியோ இல்லை சிறு பூச்சிகளோ கரையான்களோ வராமல் தடுக்க புத்தகங்களின் பக்கங்களுக்கு நடுவே உலர்ந்த வேப்பிலைகளையும் நசுக்கிய வசம்பு துண்டுகளையும் காய்ந்த ஆரஞ்சு எலுமிச்சை தோல்களையும் வைத்தால் புத்தகங்கள் பல வருடங்களுக்கு புதிதாக இருக்கும்
பல்லி – வசம்பை பொடி செய்து பல்லியிருக்கும் இடங்களில் வைத்து விடுங்க அந்த வாசனை பிடிக்காமல் போய் விடும்