ரோஜா செடியை பராமரிக்க ஈசி குறிப்புகள்
வெயில் படும் இடத்தில், ஈசியாக தண்ணீர் வடியும் மண்ணில் ரோஜா செடி நன்றாக வளரும்.
களிமண் ரோஜா செடிகளுக்கு ஏற்றது.
ரோஜா செடியால் வறட்சியைத் தாங்க முடியும் ஆனால் வறண்டு இருக்கும் நேரத்தில் செழித்து வளராது. செழிப்பான ரோஜா செடியைப் பெற, மண்ணை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருங்கள்.
அதற்காக தேவைக்கு அதிகமாக தண்ணீரை ஊற்றி விடாதீர்கள். செடியின் வேருக்கு அதிக நீர் இருந்தால் அழுகி விடும்.
எந்த நேரத்தில் ரோஜா செடிகளுக்கு உரம் சேர்க்கிறீர்கள் என்பதும் முக்கியம். உங்கள் செடி நன்றாக வளர்ந்து பூக்கும் நேரத்தில் அதற்கு உரம் தேவைப்படும்.
ரோஸ் செடிகளுக்கு உரமாக மாட்டு சாணத்தை பயன்படுத்தலாம். காய்கறி தோல், பழம் போன்ற கரிம உரங்களும் பயன்படுத்தலாம்.
ரோஜா செடியில் இருக்கும் காய்ந்துப் போன கிளைகள், இலைகளை நீக்குவது நல்லது.