(Reading time: 4 - 8 minutes)

5. உணவு நேரம்

டிவி பார்த்த படி, மொபைல் போனை பார்த்த படி சாப்பிடும் நமக்கு எல்லாம் 'ஷாக் கொடுக்கும் விஷயம் இது!

 

அரச குடும்பத்தை சார்ந்தவர்கள் அரண்மனையில் கண்டிப்புடன் பின்பற்றப் படும் உணவு நேரங்களை பின்பற்ற வேண்டும்.

 

உணவு மேஜையில் நமக்கு பிடித்தவர்கள் அருகில் எல்லாம் அமர்ந்து உண்ண முடியாது, அவரவருக்கு என்று ஒதுக்கப் பட்ட நாற்காலியில் தான் அமர வேண்டும்.

 

சாப்பிடும் போது ஸ்பூன், ஃபோர்க் போன்றவற்றை தவறியும் கீழே போட்டு விடக் கூடாது!

 

எத்தனை வகையான உணவுகள் இருந்தாலும், ரசித்து, ருசித்து பொறுமையாக எல்லாம் சாப்பிட முடியாது!!!

ராணி சாப்பிடும் வரை மட்டுமே மற்றவர்கள் உணவு உண்ண முடியும். ராணி சாப்பிட்டு முடித்தால் உடனேயே உணவு மேஜையை சுத்தம் செய்யும் கட்டளை பிறப்பிக்கப் படும்!!!!

மற்றவர்கள் உண்ணாமல் மீதம் வைத்திருக்கும் உணவு எல்லாம் அதோ கதி தான்!

 

ந்த ஐந்தை தவிர இன்னும் சில விஷயங்கள் இருக்கின்றன!

 

- அரச குடும்பத்தினர் ஆட்டோக்ராப் போடக் கூடாது!

 

- கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களில் குடும்ப நேரம் எல்லாம் கிடையாது. முழு நாளையும் முன்பே திட்டமிட்ட நிகழ்ச்சிகளில் கழிக்க வேண்டும்.

 

- அவர்கள் பயன்படுத்தும் உடைகளுக்கு என்றும் ஸ்பெஷலான சட்டங்கள் இருக்கின்றன!

 

ன்ன இதற்கு தானா ஆசைப்பட்டாய் பாலக்குமாரி என்று பாட தோன்றுகிறதா???

 

உண்மை தான் நண்பர்களே, அரசக் குடும்பத்தினர் என்பவர்கள் பல விதங்களில் சிறையில் அடைக்கப்பட்ட பறவைகள் தான்!

அவர்களுக்கு சுதந்திரம் என்பது எல்லாம்  பேச்சளவில் மட்டுமே!!!!!

 

{kunena_discuss:943}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.