TV Serials - மௌனராகம் 2 - Star Vijay TV
மௌனராகம் ஸ்டார் விஜய் டிவியில் பிரபலமாக இருந்த தொடர். இதன் முதல் பாகம் 2020ல் முடிவடைந்தது. சென்ற ஆண்டு அதன் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாக தொடங்கியது.
மௌனராகம் தொடரின் கதை வழக்கமான ‘டிராமா’ போன்றது தான் என்றாலும் இதன் முதல் பாகத்திற்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இரண்டாம் பாகமும் இப்போது டிவி ரசிகர்கள் இடையே பிரபலமாகி வருகிறது.
மௌனராகம் சீரியலின் கதை சுருக்கம்:
முதல் பாகம்:
கார்த்திக் மல்லிகா காதலர்கள். ஆனால் இருவரும் சந்தர்ப்ப வசத்தால் பிரிய நேரிடுகிறது. மல்லிகாவிற்கு ஒரு பெண் குழந்தை (சக்தி) பிறக்கிறது. இதைப் பற்றி தெரியாமல் கார்த்திக் காதம்பரியை திருமணம் செய்துக் கொள்கிறான். அவர்களுக்கு ஸ்ருதி எனும் குழந்தை இருக்கிறாள். வாழ்க்கை ஓட்டத்தில் கார்த்திக்கும், சிறுமி சக்தியும் யார் என்று தெரிந்துக் கொண்டு சந்திக்கிறார்கள். இருந்தாலும் கார்த்திக்கின் குடும்பத்திற்காக மல்லிகாவும், சக்தியும் அவனை விட்டு விலகி சென்று விடுகிறார்கள்.
இரண்டாம் பாகம்:
சக்தியும், ஸ்ருதியும் இருபதுகளில் இருக்கும் நேரத்தில் தொடங்குகிறது இந்த பாகம். மல்லிகாவின் சிகிச்சைக்காக மீண்டும் அவளை சென்னை அழைத்து வருகிறாள் சக்தி. அங்கே அவள் மீண்டும் கார்த்திக்கை சந்திக்கிறாள். ஆனால் அவள் யாரென்பதை அவனிடம் சொல்லாமலே மறைத்து விடுகிறாள். ஸ்ருதிக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. ஸ்ருதிக்கு அவளுக்கு நிச்சயத்திருக்கும் வருணை விட அவனின் தம்பி தருணை பிடிக்கிறது. தருனோ சக்தியை விரும்புகிறான். பல குழப்பங்களுக்கு பிறகு மல்லிகாவின் சிகிச்சைக்கு உதவியதற்கு பிரதிபலனாக வருணை திருமணம் செய்துக் கொள்கிறாள் சக்தி.
இத்தனை குழப்பங்களுக்கு பிறகாவது தந்தையும் மகளும் மீண்டும் இணைவார்களா என்பது மீதி கதை!