Latest Tamil Jokes - உன் கேள்விக்கு பதில் என்ன? 🙂 - அனுஷா
ஒரு பெரிய புத்திசாலி இருந்தார். அவருக்கு தான் பெரிய மேதை என்று ப்ரூவ் செய்வதில் எப்போதுமே தனி மகிழ்ச்சி.
அதற்காகவே அந்த புத்திசாலி ஒரு முட்டாளுடன் பந்தயம் கட்டினார்.
“நான் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் உனக்கு பதில் தெரியவில்லை என்றால் நீ எனக்கு ஐம்பது ரூபாய் தர வேண்டும். நீ என்னிடம் கேள்வி கேட்டு என்னால் பதில் சொல்ல முடியாமல் போனால் நான் உனக்கு ஐயாயிரம் ரூபாய் தருகிறேன்.”
முட்டாளும் சம்மதித்தான். புத்திசாலி, “உலகில் மொத்தம் எத்தனை கண்டங்கள் இருக்கிறது?” என்றுக் கேட்டார்.
முட்டாள் பதில் தெரியாது என்று ஐம்பது ரூபாயை கொடுத்தான். அடுத்து அவன் கேள்வி கேட்டான்.
“எந்த விலங்கு இரண்டு கால்களுடன் நிற்கிறது, ஆனால் மூன்று கால்களுடன் தூங்குகிறது?"
புத்திசாலி யோசித்து யோசித்து பார்த்தார். அவருக்கு பதில் தெரியவில்லை. வேறு வழி இல்லாமல் ஐயாயிரம் ரூபாயை முட்டாளுக்கு கொடுத்தார்.
ஏமாற்றம் இருந்தாலும் அவருக்கு ஆர்வமும் தாளவில்லை. முட்டாளிடம், “உன் கேள்விக்கு பதில் என்ன?” என்றுக் கேட்டார்.
முட்டாள் பதில் சொல்லவில்லை.
ஐந்து ரூபாயை மட்டும் எடுத்துக் கொடுத்தான்.
🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!
😂😂😂😂