Jokes - Anusha
எனக்கு நாலு பசங்க
என்ன செய்றாங்க
முதல் பையன் B.E, இரண்டாவது பையன் MBA, மூணாவது பையன் Ph.D, நாலாவது பையன் திருடன்
திருடனா???? ஏன் அவனை வீட்டிலேயே வச்சிருக்க?
என்ன செய்றது அவன் ஒருத்தன் தான் சம்பாதிக்கிறான் மத்தவங்க எல்லாம் வேலை இல்லாமல் இருக்காங்க அதான்...
சர்தாரின் அப்பா இறந்து போனார். துக்கம் தாளாமல் சர்தார் உக்கார்ந்து அழுது கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு போன் கால் வருகிறது. பேசி முடித்தவுடன் இன்னும் பலமாக அழத் தொடங்கினார்.
நண்பர்: இப்போ என்ன ஆச்சு?
சர்தார்: என் தங்கை போன் பண்ணினா. அவளோட அப்பாவும் இறந்துட்டாராம்...!!
கோர்ட்டில்...
ஜட்ஜ்: ஆர்டர்... ஆர்டர்.. .ஆர்டர்...
சர்தார்: பிட்சா, ரெண்டு இட்லி, மூணு தோசை, நாலு பூரி, அஞ்சு வடை, ஒரு கூல் ட்ரின்க்..
ஜட்ஜ் : ஷட் அப்.
சர்தார்: இல்ல... இல்ல... எனக்கு செவன் அப்.
ஜட்ஜ்: ????!!!!
ஹோட்டல் ஓனர்: சார், தினமும் பார்சல் வாங்கிட்டு போறீங்களே..அதுக்கு இங்கயே சாப்பிட வேண்டியது தானே?
சர்தார்:மன்னிக்கணும்.. என்னை டாக்டர் ஹோட்டல்ல சாப்பிடக் கூடாதுன்னு சொல்லி இருக்காரு. அதான்.. !!!
சர்தாரின் மனைவி இறந்த போது அவர் தனது பெயரை மாற்றிக் கொண்டார். எப்படி தெரியுமா?
சர்தார் B.A (Bachelor Again)
சர்தாருக்கு மறுமணம் நடந்தது. மீண்டும் அவர் தனது பெயரை மாற்றிக் கொண்டார். இப்போ அவரோட பேர் என்ன தெரியுமா?
சர்தார் M.A (Married Again)
சர்தார் (கவலையுடன்): வெய்ட்டான படிப்பு படிச்சும் எனக்கு இன்னும் வேலை கிடைக்கலையே...
நண்பர்: அப்படி என்ன படிப்பு படிச்சீங்க?
சர்தார்: pre-KG, LKG, UKG எல்லாம் படிச்சு இருக்கோம்ல.
சர்தார் 1: டேய்... எதுக்குடா மெழுகுவத்தி ஏத்தி இருக்க?
சர்தார் 2: கரண்ட் இல்லடா.
சர்தார் 1: சரி சரி, பேனையாவது போடு.
சர்தார் 2: லூசாடா நீ? மெழுகுவத்தி அணைஞ்சிடாது?
சர்தார்: சார், என்னோட செக் புக் தொலஞ்சு போச்சு.
மேனஜர்: பார்த்து சார், யாராவது உங்க கையெழுத்தை போட்டு ஏமாத்திடப் போறாங்க.
சர்தார்: நான் என்ன பேக்கா? இப்படி ஏதாவது நடக்கும்னு தான் முதலிலேயே எல்லா செக்கிலையும் கையெழுத்து போட்டு வச்சிருக்கேன்.
சர்தார் 1: நாளைக்கு சினிமாக்கு போறேன். வரியாடா?
சர்தார் 2: முடிஞ்சா வரேன்.
சர்தார் 1: முடிஞ்ச பின்னாடி எதுக்குடா வர? ஆரம்பிக்கும் போதே வந்துடு.