அழகு குறிப்புகள் # 27 - உங்கள் கூந்தலும் மருதாணியும்!
பல பல வருடங்களாக பலரும் பயன்படுத்தும் மருதாணிக்கு இணையான ஹேர் கலர் பொருள் சந்தையில் இன்னும் வரவில்லை என்று சொன்னால் அதிகமில்லை.
மருதாணி உங்கள் தலைமுடிக்கு இயற்கையான பழுப்பு சிவப்பு (பர்கண்டி) நிறத்தை அளிக்கிறது.
ஆனால் மருதாணி அதை மட்டும் செய்வதில்லை.
முடி உதிர்தலைக் குறைக்கிறது.
உங்கள் முடியைப் பாதுகாக்கிறது.
மற்றும் முடியில் இருக்கும் ஸ்ப்லிட் என்டுகளையும் சரி செய்கிறது.
செய்முறை:
மருதாணி பொடியுடன் சில துளிகள் சூடான தேங்காய் பால் சேர்த்து, உங்கள் தலை முடியின் அடி முதல் நுனி வரை அப்ளை செய்யுங்கள்.
அப்படியே 20 நிமிடங்கள் விட்டு விட்டு, நல்ல ப்ரூட் ஷாம்பூ பயன்படுத்தி தலை முடியை அலசுங்கள்.