(Reading time: 2 - 3 minutes)

அழகு குறிப்புகள் # 64 - நரை முடியை தவிர்க்க ஈஸி வழிகள் – 03 – கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய் மிக்ஸ்

றிவேப்பிலை நரை முடியை சரி செய்வதற்கும், நரை முடி வராமல் தடுப்பதற்கும் பலக் காலமாக பயன்படுத்த படும் தீர்வாகும்.

வைட்டமின்கள் மற்றும் தாதுக்களுடன், கறிவேப்பிலைகளில் சக்திவாய்ந்த அன்டி-ஆக்சிடன்ட்களும் உள்ளன. அவை கூந்தலை வலுப்படுத்தும் போது நரை முடி வளர்ச்சியைத் தடுக்கின்றன.

கறிவேப்பிலைகள் உச்சந்தலையின் (scalp) ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

 

தேங்காய் எண்ணெய் பொதுவாக முடியின் நிறத்தை பாதுகாக்க கூடியது.

 

இவை இரண்டும் ஒன்றாக இணைவதால் நரை முடிக்கு எதிராக ஒரு சக்திவாய்ந்த கலவையை உருவாக்குகின்றன.

 

கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய் மிக்ஸ்

ஒரு கடாயை எடுத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றவும்.

இப்போது எண்ணெயில் கைநிறையும் அளவு கறிவேப்பிலை சேர்க்கவும்.

அதில் கருப்பு நிறம் தோன்றும் வரை நன்கு சூடாக்கவும்.

பின் அடுப்பிலிருந்து கடாயை எடுத்து எண்ணெயை ஆற அனுமதிக்கவும்.

இந்த எண்ணெயை முடியின் வேர் முதல் இறுதி வரை சமமாகப் தேய்க்கவும்.

அப்படியே குறைந்தது ஒரு மணிநேரம் விட்டு விடவும்.

பின் ஷாம்பூ பயன்படுத்தி கழுவ வேண்டும்.

சிறந்த முடிவுகள் கிடைக்க வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்யலாம்.

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.