(Reading time: 2 - 3 minutes)

அழகு குறிப்புகள் # 77 - மழைக் கால ஸ்பெஷல்: வறண்ட சருமத்திற்கான பராமரிப்பு குறிப்புகள்

றண்ட சருமம் எரிச்சலடையாமலும், அரிப்பு ஏற்படாமலும் இருக்க சருமத்திற்கு ஈரப்பதம் அவசியம்.

மழைக்காலங்களில், வறண்ட சருமத்தில் எக்சீமா ஏற்பட வாய்ப்புள்ளது, ஆனால் சில நல்ல பழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் இதைத் சுலபமாக தடுக்கலாம்.

மழைக் காலத்தில் வறண்ட சருமத்தை எவ்வாறு பராமரிப்பது என்பதைப் பார்ப்போம்.

 

தண்ணீர் குடியுங்கள்!

கோடைகாலங்களில் வெப்பம் காரணமாக அதிக அளவில் தண்ணீர் குடிப்போம். ஆனால் மழைக் காலத்தில் அதை நாம் செய்வதில்லை.

மழைக்காலத்திலும் போதுமான தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். இது சருமம் உலர்ந்துப் போகாமல் தடுக்கும்.

 

கிரீம் அடிப்படையிலான மேக்கப் ரீமூவரைப் பயன்படுத்துங்கள்

தூங்கச் செல்வதற்கு முன்பு முகத்தைக் கழுவுவதும், மேக்கப்பை அகற்றுவதும் அவசியம்.

உங்களுடைய முகத்தின் சருமம் வறண்ட சருமமாக இருந்தால், கிரீம் அடிப்படையிலான மேக்கப் ரிமூவரை மட்டுமே பயன்படுத்துங்கள். இதனால் சருமம் அதன் ஈரப்பதத்தை இழக்காது, எரிச்சலடையாது.

 

மாயிஷரைசர்

உங்கள் சருமம் வறண்டுப் போகாமல் ஈரப்பதத்துடன் இருக்க நல்ல மாயிஷரைசரை தொடர்ந்துப் பயன்படுத்துங்கள்.

பன்னீர் மற்றும் கிளிசரின் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

 

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.