அழகு குறிப்புகள் # 78 - மழைக் கால ஸ்பெஷல்: எண்ணெய் சருமத்திற்கான பராமரிப்பு குறிப்புகள்
மழைக்காலங்களில் வானிலையின் ஈரப்பதம் காரணமாக, எண்ணெய் சருமம் முகப்பரு மற்றும் செபொர்ஹெக் டெர்மடிடிஸ் போன்றவற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அதிக ஈரப்பதம் சருமத்தின் அடைபட்ட துளைகளை மோசமாக்குகின்றன, அவை எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும். இந்த அதிகப்படியான எண்ணெய் தோலின் மேற்பரப்பில் சிக்கி அழுக்கு மற்றும் தூசியை ஈர்க்கிறது. அதனால் இது பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் மாறும்.
இதன் விளைவாக, உங்கள் சருமத்தில் முகப்பரு இன்னும் அதிகமாகலாம். இதை தவிர்க்க, சில டிப்ஸ் இதோ:
மென்மையான எண்ணெய் இல்லாத க்ளென்சர் பயன்படுத்துங்கள்
மழையின் விளைவுகளை எதிர்கொள்வதற்கும், பருக்களைத் தடுப்பதற்கும், காலையிலும் மாலையிலும் ஒரு மென்மையான சருமதிற்கான ஆயில் கிளீனரை பயன்படுத்தவும்.
இது அதிகப்படியான எண்ணெயையும், உங்கள் முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் தூசியையும் அகற்றி முகப்பருவைத் தடுக்கும்.
சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தவும்
மழைக்காலங்களில் கூட சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம், ஏனென்றால் சூரியன் இல்லாவிட்டாலும், அல்ட்ரா வையலட் கதிர்கள் இருக்கும். அது உங்கள் சருமத்தை சேதப்படுத்தும்.
எனவே எண்ணெய் சருமத்திற்கு ஏற்ற காமெடோஜெனிக் அல்லாத சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். இது உங்கள் துளைகளை அடைத்து முகப்பரு வராமல் தடுக்க உதவும்.
முக ஸ்க்ரப்களை தவறாமல் பயன்படுத்துங்கள்
உங்கள் முகத்தில் இருக்கும் இறந்த சரும செல்களை அகற்ற ஸ்க்ரப் உதவுகிறது. மேலும் இதனால் உங்கள் சருமத் துளைகளை அடைப்பில் இருந்து விடுவிக்கிறது.
உங்களுக்கு எண்ணெய் சருமம் இருந்தால் வாரத்திற்கு ஒரு முறையாவது ஒரு முக ஸ்க்ரப் பயன்படுத்தவும். இதனால் பருக்கள் வராமல் தடுக்கலாம்.
மேலும், ஸ்க்ரப் செய்த பிறகு வெது வெதுப்பான தண்ணீரைப் பயன்படுத்துங்கள்.