Health Tip # 82 - ஆரோக்கிய குறிப்புகள் - சசிரேகா
பச்சைக் கற்பூரத்தை நீரில் கலந்து குடித்தால் வயிறு சம்பந்தமான உபத்திரவம் வராது
வாயுத் தொல்லைக்கு வெந்நீரில் சிறிது சீரகம் சேர்த்து காய்ச்சி குடிக்க வேண்டும்
பழங்கள் சாப்பிட்டால் சளியை கரைத்து வெளித்தள்ளும் ஆற்றல் கொண்டது.
முள்ளங்கி சாற்றோடு தேன் கலந்து சாப்பிட்டால் சளி இருமல் தீரும்
மஞ்சள் துண்டை ஒரு ஊசியில் குத்தி நெருப்பில் காட்டி வரும் புகையை மூக்கினுள் இழுக்க சளி குறையும் மூக்கடைப்பு நீங்கும்
தும்பை பூக்களை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து வர தீராத ஜலதோஷம் குணமாகும்
பசியெடுக்காமலேயே சாப்பிடும் பழக்கம் பல்வேறு நோய்கள் உண்டாக காரணமாகும் ஆதலால் விரதம் இருந்தால் வயிற்றில் தேங்கி விட்ட அழுக்குகளையும் வீணான சக்கைப் பொருட்களையும் வெளியேற்றி உடம்பை சுத்தப்படுத்தும்
எல்லாவித நோய்களுக்கும் காரணம் போதிய அளவு நீர்குடிக்காததே
இரவில் தூங்கும் போது ஆண்கள் வலது பக்கமாகவும் பெண்கள் இடது பக்கமாகவும் ஒருக்களித்துப் படுத்து தூங்கினால் நன்கு ஜீரணம் ஆகும்
பச்சை வெங்காயத்தை நறுக்கி தயிரில் போட்டு இரவில் உறங்கப் போகும் முன் சிறிதளவு சாப்பிட்டால் நிம்மதியான உறக்கம் வரும்