ஆரோக்கியக் குறிப்புகள் - காதின் நலத்திலும் அக்கறை செலுத்துங்கள்!
காது தொடர்பான பிரச்சனைகள் வயதானவர்களுக்கு மட்டும் வரும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது முழுக்க உண்மை இல்லை. சில நேரங்களில் காது கேளாமை என்பது வயதைத் தவிர, அதிக சத்தம், காயங்கள், வைரஸ்கள், அன்டிபயாட்டிக் மருந்துகள் போன்ற வேறு காரணங்களாலும் ஏற்படுகிறது.
எப்போது காதின் நலத்தை பற்றி யோசிக்க வேண்டும்?
காது மற்றும் அதன் கேட்கும் திறன் டெஸ்ட் என்பதை ஒவ்வொரு ஆண்டும் செய்ய வேண்டும் என்று இல்லை.
ஆனால் உங்கள் கேட்கும் திறனில் மாற்றங்கள் தெரிந்தால் உங்கள் செவிப்புலனை உடனே சரி பார்ப்பது நல்லது. உதாரணத்திற்கு, ஒரு காதை விட மற்றொரு காது நன்றாக கேட்கிறது என்றால், கேட்காத காதில் ஏதோ கோளாறு இருக்கிறது என்று அர்த்தம்.
அதேப்போல உங்கள் காதுகளில் அவ்வப்போது அழுத்தம் அல்லது வலியை அனுபவித்தால், அல்லது காதுகளில் ஒலிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தால் அதை பரிசோதனை செய்வது நல்லது.
உங்கள் காதுகளை சுத்தம் செய்ய சரியான வழி
காதில் அழுக்கு (ear wax) இருப்பது என்று அனைவரும் சொல்வது வழக்கம். அந்த அழுக்கு அங்கே இருக்க காரணம் இருக்கிறது. அது காதுகளை தூசி, துகள்கள், வறட்சி, நுண்ணுயிரிகள் மற்றும் நீரினால் ஏற்படும் எரிச்சல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கிறது.
பொதுவாக, காதுகளில் அதிகப்படியான அழுக்கு சேரும் போது, அது தானாகவே காதில் இருந்து வெளியேறி விடும்.
சிலருக்கு இந்த ear wax வெளியே வராமல் அதிகமாக சேர்த்துக் கொண்டே இருக்கும். அப்படி இருந்தால், கடைகளில் விற்கப்படும் ear wax மென்மையாக்கும் சொட்டு மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம். அது இந்த அழுக்கு வெளியே வந்து விட உதவும். இல்லையென்றால் ஒரு நல்ல காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவரை அணுகி இந்த அழுக்கை அகற்றிக் கொள்ளலாம்.
ஆனால் ஒருபோதும் பஞ்சு, பஞ்சு வைத்திருக்கும் குச்சி போன்றவற்றை வைத்து காதை சுத்தம் செய்யாதீர்கள். அது காதின் அழுக்கை இன்னும் உள்ளே தள்ளி விட்டு விடும் அல்லது உங்கள் காதுகளை காயப்படுத்தி விடும்.