Health Tip # 65 - தண்ணீர்... இயற்கையின் வரப்பிரசாதம்!
கோடைக்காலம் முடிவுக்கு வந்திருந்தாலும், வெயிலின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை.
இது போன்ற காலங்களில் எப்பொழுதும் குடிக்கும் தண்ணீரை நம்முடனே வைத்துக் கொள்வது நல்லது.
வெயிலின் தாக்கத்தினால் நம் உடலில் இருக்கும் நீர் சத்து குறைந்து விடுகிறது. இதனால் நம் உடலும் சோர்ந்து போகிறது.
எனவே வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் அதிக தண்ணீர் குடிப்பது அவசியம்.
அதே போல, அத்தியாவசிய சத்துக்களையும் ஆக்சிஜனையும் செல்களுக்கு எடுத்து செல்வதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. சுவாசத்திற்கு தேவையான ஈரப்பதத்தையும் தருகிறது.
தேவையற்ற கழிவுகளையும் தண்ணீர் வெளியேற்றுகிறது. உடலுக்கு ஆற்றலை தருகிறது.
எனவே எல்லா காலத்திலும் அதிக அளவில் தண்ணீர் குடிப்பது நல்ல பழக்கம்.
குழந்தைகளுக்கும் சிறு வயது முதலே அதிக தண்ணீர் குடித்து பழக்கப் படுத்துவது நல்லது.
தண்ணீர் மட்டும் என்றில்லாமல் இளநீர், மோர், நீர்ச்சத்து மிகுந்த பழங்கள், புதிய பழங்களில் இருந்து எடுத்த ஜூஸ் என தேர்வு செய்தும் எடுத்துக் கொள்ளலாம்.
காபி, டீ போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
தண்ணீர், ஜூஸ் இரண்டையுமே கடுங்குளிர்ச்சியாக பருகுவதை விட மிதமான குளிர்ச்சியில் பருகுவது நல்லது.
{kunena_discuss:1131}