பொது - சித்திரம் பேசுதடி - 02 - பரவசம், பக்தி - ப்ரீத்தி R
கடவுளை காண போகிறோம் என்ற பரவசம் இருத்தலே, பக்தி தானாக வந்துவிடும்.நம்மை அறியாமலேயே நமக்குள் கடவுளை நாம் காண்கிறோம், அன்பு கொண்டவர் மனதில், குழைந்தையின் சிரிப்பில், பெரியோர்களின் பேச்சில், பகையும் வஞ்சமும் இல்லாதவர் முகத்தில், மகிழ்ச்சி அன்பு இருக்கும் இடத்தில் என எல்லாம் இடத்திலும் இறைவன் பக்தியில் பரவச நிலையில் இருப்பான்.
இன்றைய நிலையில் பக்தி பணத்திற்கும் பதவிக்கும் விலைபோய் இருக்கிறது, நமது இளைய தலைமுறைகள், தப்பான காணோட்டதோடு இறைவனை வழிபடுகின்றனர், கட்டு கட்டாக பணம் போட்டாள் தான் இறைவன் நமக்கு நம்மை செய்வர் என்று தோன்றும் அளவுக்கு இன்றைய இறை சிந்தனை போய்விட்டது. கள்ளம் கபடமற்ற குழந்தைகளின் மனதில் இறைவனை பற்றியும், பக்தி மார்க்க வழிகளை பற்றியும் தெளிவாகவும், புரியும்படியும், நமது கலாச்சாரத்தோடு காலத்து சொல்லிக்கொடுக்க வேண்டும். “அவனன்றி ஒரு அணுவும் அசையாது “என்ற உண்மையை புரியவைக்கவேண்டும்,நன் நடத்தை கடவுளை வணங்குவதன் மூலம் பெறமுடியும் என்று உணரவைக்க வேண்டும். நம்மை இயக்குவது கடவுளின் சக்தி எனவே பய பக்கிதியோடு, இறை வழிபாடு செய்யவேண்டும் என்று குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்கவேண்டும்.
{kunena_discuss:747}