(Reading time: 2 - 4 minutes)

பொது - சித்திரம் பேசுதடி - 01 - அன்பும் அறனும் - ப்ரீத்தி R

love_a_charity 

"ன்பு " வெறும் வார்த்தை அல்ல, ஓவ்வொரு உயிரிக்கு ஆரம்பம், அன்பு இல்லாத உயிர் இவ்வுலகில் இல்லை, தன்பசிக்காக படைக்கப்பட்ட மானை கூட பசித்தால் மட்டுமே கொல்லும் சிங்கம், மற்ற நேரங்களில் பக்கத்தில் நின்றுதண்ணீர் குடிக்கும், ஐந்து அறிவு படைத்த மிருகங்கள் கூட அன்புக்கு அடிபணிகிறது, ஆனால் ஆறறிவு படைத்த இந்தமனித இனம் அன்பென்றால் என்ன விலை என்று கேட்டிக்கிறது,

இன்றைய  காலக்கட்டத்தில் அன்புக்கு மதிப்பு இல்லை, நமது இந்து மதத்தின் மிகபெரிய ஆணிவேர் அன்பு  மட்டும்தான், எல்லா புராணங்களும், இதிகாசங்களும் சொல்லுவது அனைத்து உயிரிடமும் அன்பு செலுத்த வேண்டும்என்பதுதான். தன்னை கொலை செய்ய  நினைக்கும் தந்தைக்கு கூட நல் கதி  வேண்டும் என்று கேட்டான்

பிரகலாதன் , பெற்ற பிள்ளை என்றும் பாராது அன்பற்று  இருத்துவனும் அரக்கர் இனம், இன்றும் நம் நாட்டிலேஅரக்கர் இனம் தான் உலவுகிறது . சிறுகுழந்தை என்றும் பாராமல், மலராத மொட்டுக்களை அழிக்கும் அரக்கர்கூட்டம் வாழும் உலகத்தில் அன்புக்கு வேலை ஏது, அன்பு எல்லாவற்றிக்கும் அரணாக அமையும் என்று யாருக்குதெரியும்? அன்பு இருக்கும் இடத்தில் எல்லா அறங்களும் இருக்கும், சாதி, மத வேறுபாடின்றி எல்லாம் இனைவதுஅன்பால் மட்டும் தான்.

இனி வரும் காலங்களிலாது, அடுத்த தலைமுறைக்கு அன்பை மட்டும் போதிக்கும் வாழ்வில்யல் பாடங்களைபோதித்து, அன்போடு அறனும் கொண்டு இனிமையான மொழி பேசும் உள்ளம் கொண்ட குழந்தைகளை உருவாக்குவோம். 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.