(Reading time: 4 - 7 minutes)

நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.

நாம் படித்தவை - 01 - வெண்ணிலவு சுடுவதென்ன - ரமணிச்சந்திரன்

vennilavu Suduvathenna

சுதாகரி தன் பெரியப்பா மற்றும் மகள் பவித்ராவுடன் வாழ்கிறாள்.

பவித்ராவின் பள்ளித்தோழி அனிஷா. அனிஷாவிற்கு அம்மா இல்லை, அப்பா எப்போதும் பிஸியாக இருப்பவர், ஒரு வயதான உறவினர் தான் அவளை கவனித்துக் கொள்கிறார்கள் என்பதை தெரிந்துக் கொண்டு அனிஷாவிற்காக வருந்துகிறாள் சுதாகரி.

மற்றவர் வாழ்க்கையில் குறுக்கிடுவதில்லை எனும் தன் குறிக்கோள் காரணமாக அதை பற்றி எதுவும் செய்யாவிட்டாலும், பவித்ராவை அனிஷாவுடன் தோழியாக பழக அனுமதிக்கிறாள்.

இதை பற்றி தெரியாத அனிஷாவின் அப்பா மஹேந்திரன், அனிஷா வழியாக சுதாகரி அவனை மயக்க முயற்சிப்பதாக சுதாகரியிடம் குற்றம் சாட்டுகிறான்.

அதிர்ச்சி அடையும் சுதாகரி மனதுக்கு வருத்தம் கொடுத்தாலும் அனிஷாவிடம் இருந்து விலகி இருக்க முயலுகிறாள். பவித்ராவையும் அனிஷாவிடம் இருந்து தள்ளி இருக்க சொல்கிறாள்.

இந்நிலையில், திடீரென ஒரு நாள் அனிஷா காணாமல் போகிறாள். வேறுபாடுகளை மறந்து, அனிஷாவை தேட மகேந்திரனுக்கு உதவுகிறாள் சுதாகரி. இருவரும் குழந்தையை கண்டும் பிடிக்கிறார்கள். அனிஷாவை கவனித்துக் கொள்ளும் பாட்டி அவளை கொடுமை படுத்துவதை அப்போது தெரிந்துக் கொள்கிறார்கள்.

கோபத்துடன் அந்த உறவினரை அனுப்பி விடும் மகேந்திரன், அனிஷா தன்னை விட்டு விலகியே இருப்பதை கண்டு வருந்துகிறான். குற்ற உணர்ச்சியுடன், தன் மகளின் அன்பை பெற சுதாகரியின் உதவியை நாடுகிறான்.

சுதாகரியும் அவனுக்கு உதவுகிறாள்.

மெல்ல, மெல்ல மகேந்திரனின் மனம் சுதாகரியின் பக்கமாக செல்கிறது. அவளின் நேர்மையும், வெளிப்படையான பேச்சும் அவனுக்கு மிகவும் பிடித்து போகிறது.

அவளிடம் தன் விருப்பத்தை சொல்லி, பவித்ராவின் அப்பாவை பற்றி கேட்கிறான். சுதாகரி பதில் சொல்ல மறுக்கிறாள். ஆனால் அந்த பழைய வாழ்வில் சுதாகரிக்கு பிடித்தம் இல்லை என்பதை உணர்ந்துக் கொள்ளும் மகேந்திரன், எப்படியாவது அவளின் பழைய வாழ்வில் இருப்பவனிடம் இருந்து அவளுக்கு விவாகரத்து மூலம் விடுதலை பெற்று தர போவதாக சொல்கிறான். அப்போதும் சுதாகரி வாய் திறக்க மறுக்கிறாள்.

குழம்பி போகும் மகேந்திரன் தானாகவே சுதாகரியின் கடந்த காலத்தை பற்றி தெரிந்துக் கொள்ள முயற்சிக்கிறான்.

அதில் வெற்றியும் பெறுகிறான் ஆனால் அவன் தெரிந்துக் கொள்வது அவனின் மனதிற்கு வருத்தத்தை கொடுக்கிறது. என்ன, எது என்று புரியாத பருவத்திலேயே கயவர்கள் சிலரால் வன்கொடுமைக்கு ஆளாகும் சுதாகரிக்கு அவளுக்கு பரிச்சயமான பக்கத்து வீட்டு மனிதர் பெரியப்பாவாக மாறி துணையாக நின்று உதவுகிறார். அவளுக்கு நேர்ந்த கொடுமையின் பயனாக பிறந்த பவித்ராவை சிறப்பாக தன் குழந்தையென வளர்த்து வருகிறாள் சுதாகரி.

சுதாகரியின் மௌனதிற்கான பதில் கிடைத்து விட, அவளின் மனதில் இடம் பிடிக்க முயற்சி செய்கிறான் மகேந்திரன். இறுதியில் வெற்றியும் பெறுகிறான்.


மணிச்சந்திரன் எழுதிய பலக் கதைகளில் இது ஒரு கிளாசிக் என்றும் சொல்லலாம்..

சென்டிமென்ட், குடும்பம், காதல், முற்போக்கு சிந்தனைகள் என அனைத்தும் கலந்த நல்ல ஒரு கதை.

நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.

இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

{kunena_discuss:703}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.