1948ற்கு பிறகு காட்சி தரும் 'சூப்பர்' நிலாவை பார்ப்பது எப்படி?
நவம்பர் 14ஆம் தேதி பௌர்ணமி நிலவு வழக்கத்திற்கு மாறாக பெரிதாக பிரகாசமாக இருக்கும்.
68 வருடங்களுக்கு பிறகு, நிலவு இப்படி பெரிதாக காட்சி அளிக்க போவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மீண்டும் இதே போன்ற பெரிய நிலவை 2034ல் தான் பார்க்க முடியும் என்றும் சொல்கிறார்கள்.
நிலவு தன் சுற்றுப்பாதையில் பூமிக்கு அருகே வரும் அதே நேரத்தில் முழு நிலவாகவும் இருப்பதை தான் 'சூப்பர்' நிலா என்று அழைக்கிறார்கள்.
சூப்பர் நிலவாக இருக்கும் போது, நிலவு சாதாரண பௌர்ணமி நாட்களை விட 14 சதவிகிதம் பெரியதாகவும், 30 சதவிகிதம் வரை கூடுதல் பிரகாசத்துடனும் இருக்கும் என்று சொல்கிறார்கள்.
இது போன்ற சூப்பர் நிலவுகள் தோராயமாக ஒவ்வொரு 13 மாதங்களுக்கும் ஏற்படும். ஆனால் இந்த மாதம் வரும் சூப்பர் நிலவு வழக்கத்தை விட பூமிக்கு அருகே தெரிவதால் சிறப்பு என்று சொல்கிறார்கள்.
இந்தியாவில் இந்த நிலவை மாலை 7:22 அளவில் முழுமையாக பார்க்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நவம்பர் பதினான்காம் தேதி பௌர்ணமி நிலவை பார்த்து 'சூப்பர்' என்று சொல்ல மறக்காதீர்கள்!