படித்ததில் பிடித்தது - பொன்மொழிகள் - ரவை
மலரும் தாமரையின் ரசிகர்கள், தாமரை வளரும் குட்டையில் இல்லை!
இரு வகையான கல்வி தேவை: எப்படி வருமானம் ஈட்டுவது ஒன்று; எப்படி வாழ்வது என்பது இன்னொன்று.
குருவி நம் தலைக்கு மேலே பறப்பதை தவிர்க்கமுடியாது; ஆனால், அது நம் தலையில் கூடுகட்டவிடாமல் தடுக்கலாம்.
தலைவருக்காக காத்திருக்கவேண்டாம், தனியாகவே செய்யுங்கள், ஒருவருக்கொருவர்!
ஏழ்மையை விரட்டுங்கள், ஏழையை அல்ல!
இன்று மிக கொடிய நோய், காச நோயோ தொழுநோயோ அல்ல, தன்னை ஒதுக்கிவிட்டார்களே எனும் உணர்வே!
உணவுக்காக ஏங்குவதைவிட, அன்புக்காகவும் பாராட்டுக்காகவுமே அதிகமாக ஏங்குகிறார்கள்!
{kunena_discuss:1107}