படித்ததில் பிடித்தது - மேற்கோள்கள் - ரவை
1.உங்களை அறியாமல், நீங்கள் திறந்துவைத்த கதவின் வழியாக, மகிழ்ச்சி, உள்ளே நுழையும்!
2.உன்னால் மாற்றக்கூடியது, உன்னைத்தான்! ஆனால், சில சமயங்களில், அது எல்லாவற்றையும் மாற்றிவிடும்.
3.வெற்றியின் சூத்திரம், வேலையில் இல்லை, வேலை செய்வதில் உள்ளது.
4.அறியாமை அல்ல, அறியாமையை பற்றிய அறியாமை, அறிவதின் சாவு!
5.நல்லதற்கு திருப்தியடையாமலிருக்க பழகினால், மிகச் சிறந்தது கிடைக்கும்.
6.கைவிடாத போட்டியாளனே, இன்று சாம்பியன்!
7.பிறரால் உன் மதிப்பை உணரமுடியவில்லை என்பதனால், உன் மதிப்பு குறைந்துவிடாது.
8.உனது தேவைகளையே நினைத்துக்கொண்டு, கைவசம் உள்ளதை மறந்துவிடாதே!
9.தோல்வியல்ல, முயற்சியின்மையே குற்றம்!
10.கண்ணீர் வரும் அளவு சிரிப்பவன், கண்ணீர்விட்டு அழமாட்டான்.
11.நீ நாணயமாக இருந்தால், பிறர் உன்மீது நம்பிக்கை வைப்பர்.
12.தாறுமாறாக நினைப்பவன், நேர்ப்பாதையில் நடக்கமாட்டான்.
13.உலகம் உன்னை ஆதரிப்பதை நம்பினால், அமைதி உனக்கு கிட்டும்.
14.யாருக்கு பெருமை சேரும் என்பதை நினைக்காதவன், நிறைய சாதிப்பான்.
15.விடாமுயற்சி என்பது ஒரு நீண்ட இடைவிடாத முயற்சி அல்ல, தொடர்ச்சியான பல சிறிய முயற்சிகளே!
{kunena_discuss:1107}