படித்ததில் பிடித்தது - மேற்கோள்கள் - ரவை
1.சாதிக்கத் துவங்க, நீ சாதனையாளனாக இருக்கவேண்டும் என்பது அவசியமல்ல; ஆனால், சாதனையாளனாக ஆக, துவங்கித்தான் ஆகவேண்டும்.
2.உற்சாகமுடன் செய்யும் வேலை, திருப்திகரமாக அமையும்.
3.மனப்பாங்கை மாற்று; வாழ்வே மாறும்!
4.உன்னை நேசிக்கத் துவங்குவதே, மகிழ்ச்சியான வாழ்வின் துவக்கம்.
5.வேலையை திறம்பட செய்ததின் பரிசு, திறம்படச் செய்ததே!
6.இன்றைய கண்ணீர், நாளைய மகிழ்வின் விதை!
7.மனதால் எட்டக்கூடிய எதுவும், சாதிக்கக்கூடியதே!
8.நன்றாக வாழ்கிறோம் எனும் நம்பிக்கையே, ஒரு கெட்ட நாளை சுலபத்தில் தாண்டிவிடும்.
9.காத்திருந்தால் எதுவும் கிட்டும், காத்திருப்பது எதற்காக என தெரிந்திருந்தால்!
10.எந்த இடமும் சொர்க்கந்தான், உன்னைப் பொறுத்து!
11.வலி தற்காலிகம், கைவிடுதல் நிரந்தரம்.
12.எதையும் முதல்முறையாகவோ, இறுதியாகவோ பார்ப்பதாக கருது, வித்தியாசம் தெரியும்.
13.எத்தனை அடி கீழே விழுகிறோம் என்பது பெரிதல்ல, எந்த உயரத்துக்கு குதித்து எழும்புகிறாய் என்பதே!
14.சின்னச் சின்ன விஷயங்களைக் கூட ரசி! பிற்காலத்தில் அவை பெரிய விஷயங்கள் என்பது புரியும்.
15.உன் செல்வம், கையிருப்பை பொறுத்ததல்ல, தேவைகளின் குறைவை பொறுத்தது.
16.தோற்பது வேதனைதான், ஆனால் மீண்டும் முயற்சிக்காமல் இருப்பதோ, கொடுமை!
17.உன்னை நீயே முன்னுக்கு தள்ளிக்கொள்ளவேண்டும்.பிறர் செய்யமாட்டார்கள்.
18.பொன்னுக்கு ஏங்குவோர், வெள்ளியை தவறவிடுகின்றனர்.
19.தினமும் ஏதோ ஒரு நல்லது நடக்கிறது.
20.வேலை சுலபமாயிருக்க ஆசைப்படாதே! எதையும் செய்யும் திறமையை வளர்த்துக்கொள்.
{kunena_discuss:1107}