படித்ததில் பிடித்தது - மேற்கோள்கள் - ரவை
கடினமான வேலையை செய்ய, சோம்பேறியை தேர்ந்தெடு; அவன்தான் சுலபமாக முடிக்கும் வழியை கண்டுபிடிப்பான்!
நம்பிக்கையுள்ளவன் மறப்பதற்கு, சிரிக்கிறான்; நம்பிக்கையற்றவன், சிரிக்க மறக்கிறான்.
ஏழையாக பிறப்பது உன் குற்றமல்ல; ஆனால் ஏழையாக இறப்பது உன் குற்றம்!
ஒருவனுக்கு தெருவில் நூறுரூபாய் நோட்டு ஒன்று கிடைத்தது. அதை எடுத்துக்கொண்டு ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்டான். பில் மூவாயிரம் ரூபாய்! அவன் போலீஸில் ஒப்படைக்கப்பட்டான். போலீஸிடம் நூறுரூபாயை தந்துவிட்டு, அவன் வெளியே வந்தான். இதுதான் ஃபைனான்ஸ் மேனேஜ்மெண்ட்!
' செய் அல்லது செத்து மடி'என்பது பழமொழி; 'சாவதற்குள் செய்துமுடி' என்பது புதுமொழி!
{kunena_discuss:1107}