படித்ததில் பிடித்தது - மேற்கோள்கள் - ரவை
உடலை, டாக்டர் கவனிப்பார்.
வாழ்வை கடவுள் நடத்துவார்
மகிழ்ச்சி உன்கையில்தான் உள்ளது!
கவலைப்படுவது, உன் நோயை குணப்படுத்துமென்றால், தாராளமாய் கவலைப்படு!
லட்சியம் இன்றேல், வாழ்க்கை இல்லை,
நம்பிக்கையின்றேல் எதிர்காலம் இல்லை,
அனுதாபமின்றேல், அன்பு இல்லை,
பகிர்ந்துகொள்ளாவிடில், நட்பு இல்லை!
நல்ல கணிப்பு, அனுபவத்தினால் கிடைக்கிறது, அனுபவமோ, தவறான கணிப்பினால் கிடைக்கிறது.
தோல்விக்குப் பயந்தவன், வெற்றி பெற தகுதியற்றவன்.
கொட்டிவிட்ட வார்த்தைகளை மன்னிக்கலாம், மறக்கமுடியாது!
நல்லுறவு தானாக முடிவதில்லை, அகங்காரம், அறியாமை, மனப்பாங்கே அழிக்கிறது.
சோகமாயிருந்தால், கடந்த காலத்தில் வாழ்கிறாய்.
எதிர்பார்ப்புடனிருந்தால், வருங்காலத்தில்வாழ்கிறாய்.
அமைதியாயிருந்தால், நிகழ்காலத்தில் வாழ்கிறாய்.
பிறர் உன்னை வருத்தினால், அவர்களின் வருத்தம் நிரம்பி வழிந்து உன்னை சேர்கிறது என அறிவாய்!
எதிர்பார்ப்புகளே, இருதயவலிக்கு காரணம்.
நீ குழந்தையாக இருந்தபோது, உன்னை காப்பாற்றிய பெற்றோரை அவர்கள் மூப்பில் நீ கைவிடாதே!
யாராவது உனக்கு தீங்கு செய்தால், பதிலுக்கு தீங்கு செய்யாதே! அவர்களின் சூழ்நிலையை அறிந்துகொள்!
கடந்த காலத்துடன் சமாதானம் செய்துகொண்டால், அது நிகழ்காலத்தை பாதிக்காது.
காலம் எல்லா காயங்களையும் ஆற்றும். காலத்துக்கு கொஞ்சம் அவகாசம் கொடு!
பாதி தான் கேட்கிறோம், கால் பகுதி தான் புரிந்து கொள்கிறோம், சிந்திக்காமலே பதில் தருகிறோம்!
{kunena_discuss:1107}