படித்ததில் பிடித்தது - மேற்கோள்கள் - ரவை
நீ, உன் குழந்தைகளுக்கு என்ன செய்கிறாய் என்பது, முக்கியமல்ல; அவர்களாகவே செய்துகொள்ள நீ என்ன கற்றுக்கொடுக்கிறாய் என்பதே முக்கியம்! ஏனெனில், அதுவே அவர்களுக்கு வெற்றி தேடித்தரும்.
துப்பாக்கியால், பயங்கரவாதிகளை கொல்லலாம்; கல்வியால் பயங்கரவாதம் எனும் நோயையே ஒழிக்கலாம்.
பொருள்களை உபயோகி, மனிதர்களை அல்ல; மனிதர்களை நேசி, பொருள்களை அல்ல; சந்தோஷமாக வாழலாம்!
கோபம் குடலை புண்ணாக்கும், கவலை வயிற்றை ரணமாக்கும், அழுத்தம் இருதயத்தையும் மூளையையும் பாதிக்கும். பயம் கிட்னியை பாதிக்கும்.
வெற்றி பெற்றவன் வாழ்வில், தோல்வியுற்ற பல ஆண்டுகள் கடந்திருக்கின்றன.
உயர்வு, தாழ்வு, வாழ்வில் இயல்பு, ஈ.சி.ஜி. யில், நேர்கோடாக இருந்தால், நீ உயிருடன் இல்லை என்று பொருள்.
ஒவ்வொரு நாளும் சிறந்த நாளாக இல்லாமல் இருக்கலாம், ஆனால், ஒவ்வொரு நாளும் ஏதோ நல்லவை நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
மணியை அடித்தால்தான் ஓசை, பாட்டை பாடினால்தான் இசை!
{kunena_discuss:1107}