படித்ததில் பிடித்தது - மேற்கோள்கள் - ரவை
கெட்டுப்போன மனிதனை திருத்துவதைவிட, சிறந்த குழந்தைகளை உருவாக்குதல் சுலபம்.
நாம் நம்மிடம் இருப்பதை நினைத்து மகிழ்வதைவிட, இல்லாதவைகளை நினைத்தே வருந்துகிறோம்.
முன்னேற்றத்தின் சூட்சம ம் துவக்குவதே!
உன் சிந்தனைகளை மாற்று! உலகமே மாறிவிடும்.
துவங்காவிடில், வெற்றி அடையமுடியாது.
தோட்டத்துக்கு சூரிய வெளிச்சம் எத்தனை அவசியமோ, நம்பிக்கை நம் யாவருக்கும் அவசியம்.
புன்னகை எனும் வளைவு, எல்லாவற்றையும் நேராக்கிவிடும்.
பிறருக்காக வாழும் வாழ்வே, பயனுள்ளது.
கொடுப்பதினால், எவரும் ஏழையாவதில்லை.
நிகழ்காலம் மட்டுமே உன் கையில் உள்ளது, நழுவ்விடாதே!
எந்த நேரமும் நல்ல நேரம்தான், நல்லது செய்ய!
செய்யும் விதம், நடைமுறைக்கு ஒத்ததாயிருக்கட்டும், கொள்கைகளிலோ, அசைக்கமுடியா மலையாயிரு!
{kunena_discuss:1107}