(Reading time: 2 - 3 minutes)

ஆன்மீகக் குறிப்புகள் - 02 - சசிரேகா

Spiritual tips

 

சுவாமி படத்திற்கு விளக்கேற்ற பஞ்சை திரிக்கும் போது நம் விரலில் சிறிது விபூதியை தொட்டுக் கொண்டு பிறகு திரிகளை திரித்தால் திரி ஒன்றுடன் ஒன்று சேர்ந்து மெலிதான திரியாக வரும். இந்த திரியில் விளக்கு ஏற்றினால் நன்கு எரிவதுடன் நீண்ட நேரம் முத்து போல் எரிந்து அழகாக ஒளி வீசும்.

 

பூஜை வேளையில் எரிந்துக் கொண்டிருக்கும் தீபத்தை ஆடவர்கள் அணைக்க கூடாது

 

மாவாசையன்று பூசணிக்காய் உடைப்பது சகஜம் அந்த பூசணிக்காயை ஒரு போதும் பெண்கள் உடைக்க கூடாது

 

தீபாராதனை  செய்யும் போது வலமாக 3 முறை சுற்றி காட்ட வேண்டும் கோவில் அரசமரம் பசு சான்றோர்களை வலது புறமாகவே வணங்க வேண்டும்

 

ந்திசாயும் போது (மாலை நேரத்தில்) திருவிளக்கு ஏற்ற வேண்டும் குத்து விளக்கு பித்தளையில் இருக்க வேண்டும் இரும்பு உலோகத்திலான விளக்குகளை பயன்படுத்தக்கூடாது. விளக்கின் எல்லா முகங்களையும் ஏற்றி வைக்க வேண்டும் என்பதல்ல கிழக்கு திசையை நோக்கி அமையும் வகையில் ஏதேனும் ஒரு முகத்தில் தீபமேற்றினால் போதும்

 

 {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.