ஆன்மீகக் குறிப்புகள் - 03 - சசிரேகா
எக்காரணம் கொண்டும் தெற்கு திசையை நோக்கி தீபம் ஏற்றக் கூடாது
தீபமேற்றிய பிறகு தீபம் தானாக அனையும் வரை விடுவது தவறு ஏனெனில் திரியை கருக வைப்பது அபசகுனம் தீபத்தை குளிரவைக்க திரியின் அடிப்பகுதியை ”ஓம் சாந்த ஸ்வரூபினே நம” என்று சொல்லி பின்புறமாக இழுக்க எண்ணெயில் அணைந்துவிடும்
நவக்கிரகங்கள் தரும் நற்பயன்கள் – சூரியன் – ஆரோக்கியம், சந்திரன் – அறிவு, செவ்வாய் – வீரம், புதன் – கல்வி, குரு- செல்வம், சுக்கிரன் – திருமணம், சனி-ஆயுள், ராகு- யோகம், கேது- மோட்சம்
விநாயகருக்கு தோப்புக்கரணம் போடும் போது நெற்றியில் உள்ள சுகம்னா எனும் நாடி தட்டி எழுப்பப்படுகிறது இதனால் மனிதனின் நாடிகள் சுறுசுறுப்பு அடைந்து சோம்பலை அகற்றி நல்ல மனோநிலை, மன வளர்ச்சி, மெய்ஞானம் முதலியவற்றை அடைய வழி ஏற்படுகிறது
சுவாமி பூஜைக்கு ஊதுபத்தி 2 ஆகத்தான் ஏற்ற வேண்டும் ஒற்றையில் வைக்கக்கூடாது
{kunena_discuss:747}