ஆன்மீகக் குறிப்புகள் - 04 - சசிரேகா
நந்தி பகவானோ கொடிமரமோ இல்லாத கோயில்களில் முதலில் பிள்ளையாரை துதித்த பின்பே பிரகாரத்திற்குள் நுழைய வேண்டும்
தாழம்பூவாலான பாவாடையை அம்மனுக்கு அணிவிக்கவும் மலர் நுனி மேல்புறமாக இருக்குமாறு சாத்தினால் விரைவில் திருமணம் நடக்கும் கீழ்புறம் இருக்குமாறு சாத்தினால் ஆடை ஆபரணத்தில் குறைவு வராது.
சுவாமிக்கு ஆரத்தி எடுக்கும் சமயங்களில் மஞ்சள் குங்குமம் இரண்டையும் ஆரத்தி தட்டில் நீரில் கலக்கி அதில் இரண்டு சிறிய நெய் விளக்குகளை ஏற்றி வைத்து பின்னர் சுவாமிக்கு ஆரத்தி எடுக்க வேண்டும் அந்த நீரை தெருவில் கொட்டக்கூடாது அதை துளசி செடியில் ஊற்றுவது நல்லது
மனிதர்களுக்கு எடுக்கப்படும் ஆரத்தியில்தான் சுண்ணாம்பும் மஞ்சளும் போட்டு கலந்து ஆரத்தி எடுத்து அதனை வீதியில் கொட்ட வேண்டும்
சனி பிரதோஷம் விசேஷமானது காரணம் பாற்கடலை கடைந்த நாள்
வியாழன் மற்றும் அமாவாசை நாட்களில் ஒரு பிடி அரிசி வெல்லமுடன் பழங்களை பசுமாட்டிற்கு சாப்பிட கொடுத்தால் மிகவும் புண்ணியம்
{kunena_discuss:747}