பூஜை டிப்ஸ் - சசிரேகா
பூஜைக்கு கற்பூரம் ஏற்றும் முன் அதை வைக்கும் தட்டில் சிறிதளவு விபூதியை பரவலாக தூவிவிட்டு பின்னர் கற்பூரம் வைத்து கொழுத்தினால் தட்டில் கறி பிடிக்காது.
செம்பு உலோகத்திற்கு ஈர்ப்பு சக்தி அதிகம் அதனால்தான் செம்பு பாத்திரங்களை பூஜைக்கு பயன்படுத்துகிறார்கள் செம்பினால் செய்த விளக்கில் நெய் ஊற்றி விளக்கேற்றி வழிப்பட்டால் பல நன்மைகள் கிடைக்கும்
பூஜை வேளையில் அடிக்கப்படும் பூஜை மணியில் தேவர்கள் வசிக்கிறார்கள். அதனால் மணியை இடுப்புக்கு மேலாக பிடித்து ஆட்ட வேண்டும்
பூஜைக்காக ஏற்றும் விளக்கில் நெய் உறைந்து போயிருந்தால் அதில் சிறிது கற்பூரத்தை கொளுத்தி போட வேண்டும் உடனே அந்த நெய் உருகி பிரகாசமாக எரியும்
{kunena_discuss:747}