எந்த மாதங்களில் கிரகப் பிரவேசம் செய்யக்கூடாது - சசிரேகா
மாசி, பங்குனி ,ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மாதங்களில் கிரகப் பிரவேசம் செய்யக்கூடாது.
ஏனென்றால்,
மாசி மாதத்தில் சிவபெருமான் பாற்கடலில் இருந்து வந்த நஞ்சு உண்டதாலும்
பங்குனியில் மன்மதனை சிவன் நெற்றிக்கண்ணால் எரித்து தகனம் செய்ததாலும்
ஆனியில் மகாபலி சக்ரவர்த்தியை பூமியில் அழுத்தியதாலும்
ஆடியில் ராவணன் இறந்ததாலும்
புரட்டாசியில் இரணியன் வதைக்கப்பட்டதாலும்
மார்கழியில் மகாபாரதப் போர் ஏற்பட்டதாலும்
இந்த மாதங்களில் கிரகப் பிரவேசம் செய்யக் கூடாது