கவிதை - பொய்யான கோபத்தில் கூட... - பிரியங்கா
இவள் வரம் தருவாள் என,
அவன் விழி வழி துணிந்து சொன்னான்.
அவன் சொல்லை ஏற்க மறுத்தவள்,
அவன் சென்றபின் வெட்கத்தில் மலர்ந்தாள்.
பின் ஒளிந்து ரசித்த அவன்,
கவலை இன்றி ஆடி மகிழ்ந்தான்.
அதிர்ச்சியில் திரும்பியவள்,
ஓடி சென்று ஒளிந்துகொண்டாள்.
இவர்கள் பகிர்ந்துகொள்ளும் இவ்வுறவில்,
அவளை பற்றிய புரிதலில்,
அவன் காட்டிய பெருமையோடு,
அவள் மறுக்க நினைத்து தோற்கும்,
அவளது பொய்யான கோபத்தில் கூட,
உண்மையான காதல் இருக்கிறது.
{kunena_discuss:779}