அவள்…!! - கவிதை போட்டி - 02 - ஸ்வேதா சந்திரசேகரன்
ஜனனம் முதல்-மரணம்
வரை மாறாத இயற்கையின்
சுழற்சியில் அவளும் ஒன்று...
கால மாற்றத்தோடு -வெவேறு
அவதாரம் எடுத்தாள்!!
கற்கண்டான கட்டிபோடும்
அன்பை மட்டும் மாற்றாமல்!!
உயிர் கொடுத்தாள் அன்பான
அன்னை ஆனாள்...
பாசத்தோடு ஊட்டி வளர்த்தாள்
தாமரையாள் தமக்கையனாள்...
தோயும் வாழ்கையில் -தோள்
கொடுத்தாள் உற்றத்தோழியானாள்..
உணர்வை தட்டி எழுப்பி சிலிர்க்க
வைத்தாள் காதலியானாள்…
முத்தான முதல் காதல்-தோற்க
பித்தன் ஆனேன்!!
தணலான இதயத்தை- தண்ணீர்
ஊற்றி ஆற்றினாள் மனைவியானாள்!!
"அப்ப்பா" என்று உறவிற்கு உயிரோட்டம்
தந்தாள் மகள் ஆனாள்...
பிரபஞ்சம் புள்ளியில் தொடங்கியதென்றால்
புள்ளி பெண்மை தானோ???
அவள் தான் சரித்திரத்தின் முதல் புள்ளியும்
முற்று புள்ளியும் - அறியாமல் போனேனோ??
அன்பில்லாமல் போயிருந்தால் சுற்றும்
உலகம் சுழலாமல் போயிருக்கும்...
அவள் இல்லாமல் போயிருந்தால் -அன்பிற்கு
அர்த்தமில்லாமல் போயிருக்கும்....