(Reading time: 1 - 2 minutes)

அவள்…!! - கவிதை போட்டி - 02 - ஸ்வேதா சந்திரசேகரன்

ஜனனம் முதல்-மரணம்

வரை மாறாத இயற்கையின்

சுழற்சியில் அவளும் ஒன்று...

 

கால மாற்றத்தோடு -வெவேறு

அவதாரம் எடுத்தாள்!!

 

கற்கண்டான கட்டிபோடும்

அன்பை மட்டும் மாற்றாமல்!!

 

உயிர் கொடுத்தாள் அன்பான

அன்னை ஆனாள்...

 

பாசத்தோடு ஊட்டி வளர்த்தாள்

தாமரையாள் தமக்கையனாள்...

 

தோயும் வாழ்கையில் -தோள்

கொடுத்தாள் உற்றத்தோழியானாள்..

 

உணர்வை தட்டி எழுப்பி சிலிர்க்க

வைத்தாள் காதலியானாள்…

 

முத்தான முதல் காதல்-தோற்க

பித்தன் ஆனேன்!!

 

தணலான இதயத்தை- தண்ணீர்

ஊற்றி ஆற்றினாள் மனைவியானாள்!!

 

"அப்ப்பா" என்று உறவிற்கு உயிரோட்டம்

தந்தாள் மகள் ஆனாள்...

 

பிரபஞ்சம் புள்ளியில் தொடங்கியதென்றால்  

புள்ளி பெண்மை தானோ???

 

அவள் தான் சரித்திரத்தின் முதல் புள்ளியும்

முற்று புள்ளியும் - அறியாமல் போனேனோ??

 

அன்பில்லாமல் போயிருந்தால் சுற்றும்

உலகம் சுழலாமல் போயிருக்கும்...

 

அவள் இல்லாமல் போயிருந்தால் -அன்பிற்கு

அர்த்தமில்லாமல் போயிருக்கும்....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.