(Reading time: 1 - 2 minutes)

கவிதை - திருமண வாழ்த்துக்கள் - கஜலக்ஷ்மி

marriage.

திருமணம் எனும் நறுமணம் வாழ்வில் வீச

பூக்களின் பண்புகளை பாராட்டுங்கள்!

அளவில் சிறிதாயினும் மல்லி முல்லைப் போன்று

பெரிதான வாசம் எனும் அன்பை

பாராட்ட வாழ்த்துக்கள்!!!

சேற்றில் முளைத்திருந்தாலும் அல்லி

தாமரைப் போன்று

துன்பம் எனும் சகதியை புறந்தள்ளி

வாழ்வில் மீண்டும் நிற்க வாழ்த்துக்கள்!!!

தனக்கென தனிவாசம் தளர்ந்திருந்தாலும்

கணகாம்பிரம் போன்று மற்ற பூக்களோடு

சேர்ந்து வண்ணம் தீட்டுவதுபோல் உங்கள்

வாழ்வில் நித்தம் வண்ணம் சேர்க்க வாழ்த்துக்கள்!!!

பூவையர் சூடமுடியா பூவென்றாலும்

சர்க்கரை நோய்க்கு அருமருந்தாகும்

ஆவாரம் பூ போன்று பந்தங்கள்

உங்களை சூடிக்கொள்ளா விட்டாலும்

அவர்களின் துன்பங்களை களைய வாழ்த்துக்கள்!!!

இவ்வாறு பாரிலுள்ள நன்மை பயக்கும்

பூவின் பண்புகளெல்லாம் உங்கள்

திருமண வாழ்வில் வசந்தம் வீச

வானளவு வாழ்த்துக்கள்!!!

வையம் போற்ற வாழுங்கள்!!!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.