(Reading time: 1 minute)

கர்த்தர் பிறந்தார் - கஜலக்ஷ்மி

அதிசய குழந்தை ’இயேசு கிறித்துவர்’ அவணியில் உதித்தாரே !

அவலங்களை போக்கும் வாக்குதத்தம் அன்புடன் கொடுத்தாரே !

சோதனைகள் பலதாண்டி சாதனைகள் புரிய வல்லமை வழங்கினாரே !

பயங்கொள்ளாதே ’நான் உன் தேவன்’ இருக்கிறேன் என பக்கபலமாய் நின்றாரே !

ஐந்து அப்பம் இரண்டு மீண் கொண்டு ஐயாயிர்ம் ஜனங்களை போஷித்தாரே !

பேதமையை போக்கும் ’பைபிள்’ மூலம் வேத வாக்கியங்களை

மதபேதமின்றி வாசிக்க வழங்கினாரே !

இம்மாதேவனின் பிறந்தநாளை ஒவ்வொரு  நாளும் ஒவ்வொருவரும் நினைப்போமே !

’கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்கள்’ என்ற வாசகம் என்னி மகிழ்வோமே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.