கர்த்தர் பிறந்தார் - கஜலக்ஷ்மி
அதிசய குழந்தை ’இயேசு கிறித்துவர்’ அவணியில் உதித்தாரே !
அவலங்களை போக்கும் வாக்குதத்தம் அன்புடன் கொடுத்தாரே !
சோதனைகள் பலதாண்டி சாதனைகள் புரிய வல்லமை வழங்கினாரே !
பயங்கொள்ளாதே ’நான் உன் தேவன்’ இருக்கிறேன் என பக்கபலமாய் நின்றாரே !
ஐந்து அப்பம் இரண்டு மீண் கொண்டு ஐயாயிர்ம் ஜனங்களை போஷித்தாரே !
பேதமையை போக்கும் ’பைபிள்’ மூலம் வேத வாக்கியங்களை
மதபேதமின்றி வாசிக்க வழங்கினாரே !
இம்மாதேவனின் பிறந்தநாளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் நினைப்போமே !
’கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்கள்’ என்ற வாசகம் என்னி மகிழ்வோமே