கவிதை - இயற்கையின் அடிமையாய் நான் - வளர்மதி
காலை கதிரவன் கண் சிமிட்ட
அழகாய் கன்னம் சிவக்குமாம்
மேகம்!
சில்லென்று வீசும் காற்றின் குளிமையாய்
கண் மூடி ரசிக்குமாம்
மரம்!
கோபம் கொள்ளும் சூரியன் மேல்
தண்ணீர் ஊற்றி விளையாடுமாம்
மழை!
தண்ணீர் வற்றாமல்
கற்களுக்கு இடையே ஓடி
காதல் கதைகளை எழுதுமாம்
அருவி!
மழையும் சூரியனும் ஓடி
பிடித்து விளையாடுகையில்
நாடுவராய் நிற்குமாம்
வானவில்!
திடீர் இசை மழையில்
போட்டி போடுமாம்
இடியும் மின்னலும்!
பிரிந்த கரையை ஆசையுடன்
ஓடி வந்து முத்தமிடுமாம்
அலை!
அதை கண்டு சிரித்த முகத்துடன்
பிரியா விடை குடுக்குமாம்
சூரியன்!
நிலவை பார்த்து
மகிழ்ச்சியில் கண்ணடிக்குமாம்
நட்சத்திரம்!
கொட்டும் பணியில் குளித்து
விடியலில் பல வண்ண
உடைகள் அணியுமாம்
பூக்கள்!
நித்தம் நித்தம் இயற்கை நடத்தும் காவியத்தை
ரசித்தபடி நான்!
{kunena_discuss:779}