(Reading time: 1 minute)

தொலைந்த பக்கங்கள்

நீண்டதூரம் பாதை மாறி
மறைந்து நின்று வேடிக்கை பார்த்து ,
வித்தை காட்டுபவனிடம்
விசேஷ கேள்விகள் ,
சாலை ஒரக்கடைகளில்
உப்போடு நெல்லிக்காய்
மிளகாய்ப்பொடியுடன் மாங்காய் !
கடிக்கமுடியாத கல்கோணா,
கலக்கலான கடலைமிட்டாய் ,
முடிக்காத  வீட்டுப்பாடங்கள்,
விடைதெரியாத வினாக்கள் !
இருந்தாலும் பள்ளி செல்ல மறுத்ததில்லை,
சுகமாய்சென்ற நீண்ட பயணங்கள்
இன்றும் நிறைவில் நிற்கும் மனப்பாடங்கள !!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.