என் தோழனே???
ஒவ்வொரு இரவிலும்,
மின்னும் நட்சத்திரங்களாய் கூடித்திரிந்த நிகழ்வுகள்!
ஓடும் மேகமாய் நாம் கடந்த இடர்கள்!
குளிர்ந்த பனியாய் நின் ஸ்பரிசத்தின் மிச்சங்கள்!
கவிந்த இருளாய் நிகழ்கால மாறுதல்கள்!
என் சிநேகிதனே,
அஸ்தமன சூரியனாய் உன் நினைவுகளை என் மனதில் ஆழத்தில் புதைக்கத் துடிக்கின்றேன்!
ஆனால்,
ஆர்பரிக்கும் அதித்தனாய் மீண்டும் மீண்டும் எழுகிறது உன் ஞாபகங்கள்!
நான் என் செய்வேன்,
என் தோழனே???