வசையா!!! வாழ்த்தா !!! - மது
எறும்பிடம் கற்றுக் கொண்டேன்
சுறுசுறுப்பாய் சேமித்து வாழ்வதற்கு
எருமையிடம் கற்றுக் கொண்டேன்
வெயிலோ மழையோ நிலைத்து நிற்பதற்கு
காளையிடம் கற்றுக் கொண்டேன்
சளைக்காமல் கடினமாய் உழைப்பதற்கு
காவல் நாயிடம் கற்றுக் கொண்டேன்
எப்போதும் நன்றியோடு இருப்பதற்கு
சிலந்தியிடம் கற்றுக் கொண்டேன்
விடா முயற்சியால் வெற்றி பெறுவதற்கு
சிட்டுக் குருவியிடம் கற்றுக் கொண்டேன்
ஒவ்வொரு நாளையும் புதிதாய் ரசிப்பதற்கு
சிங்கத்திடம் கற்றுக் கொண்டேன்
கம்பீரமாய் உறுதியுடன் ஆள்வதற்கு
சில்வண்டிடம் கற்றுக் கொண்டேன்
கூடி இனிமையாய் மகிழ்வதற்கு
ஒவ்வொரு மிருகத்திடமும் கற்றுக் கொள்ள
இவ்வளவு நல்லவைகள் இருக்கையிலே
இனி எவரேனும் மிருகம் என்றால்
அது வசையா!!!வாழ்த்தா!!!
{ குறிப்பு : இந்தக் கவிதையை எழுத தூண்டிய காதல் நதியென வந்தாய் ப்ரியா @ வினோதாவிற்கு என் நன்றி }