புத்தாண்டு - சகி
காலையில் எழுந்ததும் சோம்பல் முறித்தேன்!!!
இன்று...
உனக்கு வித்தாயாசம் தெரியவில்லையா?
என்று தலையில் குட்டியது தென்றல் காற்று!
விழித்தேன்....
தோட்டத்தில் செடிகளோடு
மௌன சம்பாஷனை நடத்தியப் போது,
இன்றைய நாளை மறந்தாயா?
என்றன பூஞ்செடிகள்.
விழித்தேன்...
கான குயில்கள் இன்று
ஏழு ஸ்வரங்களையும், ஒன்றாய் பாடி களித்தன.
விழித்தேன்....
வழக்கமான பிரகாசத்தோடு
இல்லாமல்
உற்சாகத்தோடு தன் பணி
செய்ய வந்த ஆதிதேவன்
நினைவுப்படுத்தினான்...
காத்திருந்த விடியல் தோன்றிவிட்டது என்று!!!!