(Reading time: 1 - 2 minutes)

தூய்மையின் ஒளியானவன்.... - ப்ரியா

உன்னை சுற்றி உள்ள அனைத்தும்

என்னது என்று அறிவித்தான் அன்றே...!!!

உன்னுள்ளும் இருக்கும் உயிரின் சுடரும்

நான் அறிவாய் என்று சொல்லியது ஏனோ..!!!

உள்ளும் நானே புறமும் நானே

என உள்ளத்தில் உறைக்கும் படி

உரக்க சொல்லி இருந்தால்           

மனதின் பிடியிலிருந்து

மனிதன் தப்பியிருப்பனோ!!

தடைகள் தகர்த்து சுதந்திரம் அடைய

பல்லானோர் சிந்திய ரத்தம் வீணில்லை!!!

மனத்தடைகள் துறந்து தூய்மை

அடைய அவன் சிந்திய ரத்தமோ

பயன் என்று தோன்றவில்லை!!!

உனக்காக என்றும் உள்ளேன் என

சிலுவையை சுமப்பவன் கூடவே

உன் பாவங்களை சுமக்க..

அவன் மன வலியும் குறையவில்லை

தாய்மை உணர்வும் மறையவில்லை..

உன் பெயரை மனதில் சுமந்து

உன் உயிரை தலையில் சுமக்கிறான்

அவன் வலியை உடலில் சுமக்கவில்லை எனினும்

அவன் பெயரயாவுது உள்ளத்தில் நிறுத்தி வை

அவன் பெற்ற துன்பம் அனைத்திற்கும்

மருந்திட நினைத்தாயானால்

இப்பிறவியிலேயே அவன் பாதம் சேர தவமிருப்பாய்

உண்மை என்னும் உன்னத மந்திரத்தால்... 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.