அவனும் நானும் - 02- மனம் விரும்பும் மல்லிகை நீ! - ப்ரியா
மண்ணை கிளறி நடுகையில்
கைகளில் தவழ்ந்து..
மாதம் ஒன்று கடந்த பின்
மடி நிறைய கனிந்து..
கொஞ்சிய படி பறிக்கையில்
விரல்களில் முத்தமிட்டு..
பாடியபடி தொடுக்கையில்
பளிச்சென சிரித்து..
நாள்தோறும் என் தோள்களில் புரண்டு..
மனை மட்டும் அல்லாது
மனம் எங்கிலும் மணம் பரப்பும்
மதி மயக்கும் மல்லிகை போன்றதடா!!
காற்றினில் உனக்காக நான் அனுப்பும் காதல்..!!!
{kunena_discuss:779}