அவனும் நானும் - 04 - அதிகாலை ஆனந்தம் நீ....!! - ப்ரியா
ஜன்னலின் இருட்டு இடுக்குகளில்
புகுந்து என்னை திருட்டு தனமாய்
உரசும் சில்லிட்ட காற்றும்..
என்னை எழுப்ப தான்
எங்கிருந்தோ வந்ததோ என
நான் நினைத்து பூரிக்கும் வண்ணம்
தலை அசைத்து கவி சொல்லும் குருவியும்..
சிவந்த சித்திரமாய் மீண்டும்
கிழக்கில் பிரசவிக்க இருக்கும்
சூரியனும் விடைபெறும் சந்திரனும்..
தெருக்கோடி பெருமாள் கோவில் சுப்ரபாதமும்
மொட்டை மாடி ஒற்றை ராணி ரோஜாவும்
அன்னை தந்த இளம் சூடான குழம்பியும்
அது என்னுள் செல்லும் இடமெல்லாம்
விதைத்து விடும் புத்துணர்ச்சியும்
என் தலையணையில் இன்னும் உறங்கும்
உன் புகைப்படமும் என் திருட்டு முத்தங்களும்....
அதிகாலையின் அத்தனை ஏகாந்தமும்
ஒன்றாக கிடைக்கப்பட்ட பொக்கிஷமடா
உன்மீது எனக்கு ஆன காதல்..!!!!
{kunena_discuss:779}