விழித்தெழு பெண்ணே - கவிதை போட்டி - 18 - மீனா
அதியமானீடம் நெல்லிக்கனி பெற்று- அன்றே
ஆண் பெண் நட்பிற்கு வித்திட்டார் எங்கள் அவ்வை மூதாட்டி
ஆழ்வார்கள் பன் இருவருள் - சுடி தந்த சுடர்க்கொடி
ஆண்டாளும் இடம் பிடித்தாள்.
வீரவாள் ஏந்தி வெற்றி முரசு
கொட்டியவள் எங்கள்- ஜான்சிராணி
வெள்ளையனை வெளியேற்றி
வீர முழக்கம் இட்டவள் எங்கள்- வேலுனாட்சி
பரந்தாமனை தன் பஜனை பாடல்களால்
பரவசபடுதியவள் எங்கள் பக்தை - மீரா
பரமசிவனின் கைலாயத்தை தன் கைகளால் கடந்து
பக்தியில் சிகரம் தொட்டார் எங்கள் - காரைக்கால் அம்மையார்
பெண்ணை நிலவென்பர் அன் நிலவை - சுற்றிவந்த
பெண் எங்கள்- கல்பனா சாவ்லா
பளு தூக்கி ஒலிம்பிக்கில் நம்
பாரத பெருமை மீட்டாள் எங்கள்- அஞ்சனா ஜார்ஜ்
நட்பாய்,காதலாய்,வீரமாய்,
பக்தியாய், சாதனையாய்,சரித்திரமாய்
ஆண்டாண்டு காலமாய் வீற்றிருப்பது பெண்மை
அண்மையில் ஒரு சேதி கேட்டேன்
கல்லூரி பெண்கள் கருமுட்டை - விற்கின்றனராம்
காது கூட கூசுகிறது
காலி மது புட்டில்கள் பெண்கள் விடுதியில் உருள்கின்றதாம்
கன்னி பெண்ணின் கற்பு - இன்று
கைபேசியில் விற்கப்படுகிறதாம்
ஆண் முறை தவறினால் பெண் அவள் மீடிடுவாள்
பெண்ணே முறை தவறினால் யார் வந்து மீடிடுவர் ?
விழித்துக் கொள்ளும் எம் - பெண்ணினமே
வீறுகொண்டு எழுந்து வா புது சரித்திரம் படைப்போம்
மீண்டும் நட்பாய்,காதலாய்,வீரமாய்,
பக்தியாய், சாதனையாய்,சரித்திரமாய்.