(Reading time: 1 - 2 minutes)

மன்னவா.... - பத்மாவதி

என்னுள்ள மன்னவனே,
உன் கண்ணில் என் காதலை காண..
உன் மழலை சிரிப்பில் என் தாய்மை பொங்க..
உன் மார்பில் என் உறக்கம் தேட..
உன் இன்பதனில் என் முகம் மலர..
உன் துன்பம் என் கண்ணீரில் கரைய...
நீ கொண்ட பல ஓவியங்கலுள்
உயிருல்ல ஓவியமாய் உன் அருகில் நான் வாழ,
நான் கொண்ட ஏக்கம் அதனை நீ என்று தீர்ப்பாயோ???..........

என் ஆசைகளுக்கு எல்லையில்லை உன்னை காணும் வரை...
ஏனோ,
   என் ஆசைகளுக்கு உறக்கமில்லை உன்னிடமிருக்கும் வரை!!!!!!

அன்புள்ள காதலனே,
நீயில்லா மணமேடை நான் காணும் அந்நாளில்,
என் உயிர் பிரியாதோ!!!
உனை நாடி வாராதோ!!!

அன்புள்ள ரசிகா,
உன்னை மறக்கும் நாள் எதுவோ அன்று,
என் இதயம் துடிக்க மறந்து விடும்!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.