அழகு - பத்மாவதி
நரம்புகளிலே காட்டும் இலைகளின் அழகு..
நிறத்திலே மிளிரும் பூக்களின் அழகு..
கதகதப்பிலே உணற்றும் காற்றின் அழகு..
விடியலில் காணும் பகலவனின் அழகு..
காரிருளில் ஒளிரும் மின்மினிப்பூச்சிகளின் அழகு..
குழந்தையின் சிரிப்பில் மகிழ்ச்சியின் அழகு..
காதலை ஏற்கும் கண்களின் அழகு..
வினாக்களின் விடையாய் புன்னகை அழகு..
அழகு- கூறக்கூற எழுகின்ற ஓசையும் அழகு!!!