(Reading time: 1 - 2 minutes)

கவிதை - முரண்பாட்டுக் கவிதை - ஜான்சி

love

 

துடிக்கவும் வைக்கிறான்- அவளை

துவளவும் செய்கிறான்.

 

அரற்றவும் வைக்கிறான் 

அணைத்தும் கொ(ல்)ள்கிறான்.

 

வெறுக்கவும் வைக்கிறான்- அன்பின்

வெம்மையும் தருகிறான்.

 

சுடுசொல் லாவாக்களை பொழிகிறான்- மறுகணமே

மல்லிகையால் அர்ச்சிக்கிறான்.

 

கோபத்தால் தண்டிக்கவும் செய்கிறான் -காயத்தை

மயிற்பீலி மருந்திட்டு

ஆற்றவும் செய்கிறான்.

 

காணக் கிடைக்காத முரண்பாட்டுக் கவிதை அவன்.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.