கவிதை - முரண்பாட்டுக் கவிதை - ஜான்சி
துடிக்கவும் வைக்கிறான்- அவளை
துவளவும் செய்கிறான்.
அரற்றவும் வைக்கிறான்
அணைத்தும் கொ(ல்)ள்கிறான்.
வெறுக்கவும் வைக்கிறான்- அன்பின்
வெம்மையும் தருகிறான்.
சுடுசொல் லாவாக்களை பொழிகிறான்- மறுகணமே
மல்லிகையால் அர்ச்சிக்கிறான்.
கோபத்தால் தண்டிக்கவும் செய்கிறான் -காயத்தை
மயிற்பீலி மருந்திட்டு
ஆற்றவும் செய்கிறான்.
காணக் கிடைக்காத முரண்பாட்டுக் கவிதை அவன்.
{kunena_discuss:779}