நலமாய் வாழுவோமே - ஜான்சி
வானம் எங்கும் மலர்கள் மணக்க,
கைகள் தோறும் நட்சத்திரங்கள் மின்ன,
சுடரைப் போன்றே முகமும் ஒளிர,
இனிய வாழ்வு நாமும் வாழ,
அழகும், உருவும் நிறைவாய் தந்து,
ஆற்றல்கள் பலவும் மிகப் பொழிந்து,
நம்மைப் படைத்தார் இறைவன் அன்று.
கவலைகள் ராட்ச வலுப் பெற்று,
மனதை கெடுக்கும் நிலை விடுத்து,
அருளும், அகமகிழ்வும் கொண்டு
நலமாய் என்றும் நாம் வாழுவோமே.
{kunena_discuss:779}