ஆறாம் அறிவு?! - ஜான்சி
நான் நான்கு கால் பிராணிதான்-எனக்கு
ஆறறிவு இல்லைதான்.
அமைதியாய் அமரும்போது
தண்ணீர் விட்டெறிகிறாய்,
கற்கள் பல எறிந்தே எனக்கு காயம் தருகிறாய்.
பயந்து மிரண்டு ஓடும்படி தினமும் விரட்டுகிறாய்.
நான் எரிச்சலுற்று எதிர்த்து நின்று,
குரைக்க ஆரம்பித்ததும்,
மிரண்டு மிரண்டு விழிக்கிறாய்.
வழி மாறிச் செல்ல நினைக்கிறாய்.
சாந்தகுணத்தோரை வன்மையாக மாற்றும்
உந்தன் அறிவாற்றல் கண்டு வியந்து,
நான் இறைவனிடம் சொன்னேன்.
எனக்கு ஆறாம் அறிவை தராததற்காக நன்றி இறைவா.
{kunena_discuss:779}