கேட்கப் படாத கேள்விகள்? - ஜான்சி
அவளும்,
அவள் காதலும்,
அக்காதலுக்கான,
அவள் வீட்டின் எதிர்ப்பும்,
எனக்கு ஏற்கெனவே பரிச்சயம்.
ஒரு நாள்
அவளும்
வந்தாள்.
தன் திருமண அழைப்பிதழ்
தந்தாள்.
உள்ளத்தில் கேள்வி
எழுந்தது.
தோழி,
உன் காதல் ஏற்கப் பட்டு விட்டதா?
உன் மணவாளன்
உன் காதலன் தானா?
ஆனால்,
பின்னர் நியாபகம் வந்தது.
இது தியாக பூமி
பெண்ணிடம் மட்டுமே
தியாகம் கேட்கும் பூமி.
ஒருவேளை
என் கேள்வியால்
அவள் உள்ளம் சிதறிடும்
என்றே உணர்ந்ததால்,
என் உள்ளத்தில் கேள்வியை வைத்தேன்.
என் வாயை புன்னகையால் தைத்தேன்.
{kunena_discuss:779}