தடுக்காதீர் - ஜான்சி
வானம் தொட்டு,
பூமி வந்து, மறுபடி
ஆகாயத்தில் மிதக்கின்ற
கட்டுக் கடங்காமல் திமிரும்
இனிய கற்பனையை
இது என்னத் தேவைக்கு?
என்றுச் சொல்லி
தடுக்காதீர்.
கற்பனை
நிஜமானால் நலமே
நிஜமற்ற நிழலானாலும்
கதையின் ஒருக் கருவாய்
கவிதையின் வரியாய்
வாழ்வில் மற்றொரு கனவுக் காணத் தூண்டுதலாய்
அமையலாம்.
எனில், தடுக்காதீர்
கற்பனைகளைத் தடுக்காதீர்.
{kunena_discuss:779}